தாடியை கிண்டல் செய்த நண்பரை, காலி செய்த கட்டிடத்தொழிலாளி

 

தாடியை கிண்டல் செய்த நண்பரை, காலி செய்த கட்டிடத்தொழிலாளி

ஈரோட்டில் மதுபோதையில் தனது தாடியை கிண்டல் செய்த நண்பரை, கழுத்தை அறுத்துக்கொலை செய்த கட்டிட தொழிலாளி கைதுசெய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் (40) என்பவர், ஈரோட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் சேலத்தை சேர்ந்த லட்சுமணன்(38) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.

தாடியை கிண்டல் செய்த நண்பரை, காலி செய்த கட்டிடத்தொழிலாளி

இருவரும் இரவில் மணிக்கூண்டு பகுதியில் சாலையோரம் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, லட்சுமணன் கோவிலுக்கு வேண்டிகொண்டு வளர்த்த தாடியை, பெருமாள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், தான் வைத்திருந்த ஆக்சா பிளேடினால் பெருமாளின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொலையாளி லட்சுமணனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தாடியை கிண்டல் செய்த நண்பரை, காலி செய்த கட்டிடத்தொழிலாளி