“அதிமுகவினர் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை” : ஸ்டாலின் எச்சரிக்கை!

 

“அதிமுகவினர் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை” : ஸ்டாலின் எச்சரிக்கை!

தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான் ; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அதிமுகவினர் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை” : ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழகத்தில் சட்டப்பேரவை நெருங்கி வரும் சூழலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மக்கள் கிராம சபை மூலம் மக்களை மாவட்டவாரியாக சந்தித்து வந்த ஸ்டாலின் தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றுமுன்தினம் மதுரையில் 4 ஆம் கட்ட பரப்புரையை தொடங்கிய அவர் இன்று கோவையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

“அதிமுகவினர் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை” : ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்நிலையில் கோவை சிங்காநல்லுரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான் ; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தால் விரைவில் செஞ்சுரி அடிக்கும். தமிழக அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் மீது ரூ.2.50 காசு வாட் வரி விதித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம். தொடர்ந்து விலை அதிகரித்தல் கேஸ் விலையும் 1000ஐ எட்டிவிடும். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆட்சிகள் மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஊர்களிலும், அதிமுகவினர் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை” என்றார்.