நெருங்கும் தேர்தல்: நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

 

நெருங்கும் தேர்தல்: நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கியது. கடந்த நவ.16ம் தேதி வரைவு வாக்காளர் வெளியிடப்பட்டு பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நவம்பர் மாதத்தில் 2 நாட்களும், டிசம்பர் மாதத்தில் 2 நாட்களும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

நெருங்கும் தேர்தல்: நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.99 லட்சம் விண்ணப்பங்கள், பெயர் நீக்கம் செய்ய 4.43 லட்சம் விண்ணப்பங்கள், பெயர் திருத்தம் செய்ய 3.36 லட்சம் விண்ணப்பங்கள் என மொத்தம் 30.68 லட்சம் லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் களமிறங்கிய தேர்தல் ஆணையம், ஜன.20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.

நெருங்கும் தேர்தல்: நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

அதன் படி, சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட உள்ளது. இதற்கு மேல் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது என தேர்தல் துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.