இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

 

இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணிநேரம் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதுடன் பிஇ உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் நிலையில் தற்போது தேர்வு நேரம் ஒரு மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் ஆன்லைனில் தேர்வு நடக்கிறது.