இலங்கை lpl அணிகளில் ஒன்றை வாங்கிய இந்தி நடிகர் குடும்பம்!

 

இலங்கை lpl அணிகளில் ஒன்றை வாங்கிய இந்தி நடிகர் குடும்பம்!

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளின் புகழ் எங்கும் பரவி விட்டன. அதேபோல போட்டிகள் உலகின் பல நாடுகளில் நடத்தப்படுகின்றன.

இலங்கையில் எல்.பி.எல் எனும் பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

இலங்கை lpl அணிகளில் ஒன்றை வாங்கிய இந்தி நடிகர் குடும்பம்!

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 21-ம் தேதி எல்.பி.எல் போட்டி இலங்கையில் தொடங்குகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான். அவரை இலங்கையில் எல்பிஎல் அணிகளில் ஒன்றை வாங்க அழைப்பு விடுத்தது இலங்கை கிரிக்கெட் சங்கம். ஆனால், தற்போது வேறொரு இந்தி நடிகர் குடும்பம் இலங்கையில் எல்பிஎல் அணிகளில் ஒன்றை வாங்கியுள்ளது.

இலங்கை lpl அணிகளில் ஒன்றை வாங்கிய இந்தி நடிகர் குடும்பம்!

இலங்கை எல்பிஎல் தொடரில் கண்டி டஸ்கர்ஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் ஆடுவதற்காக வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கண்டி டஸ்கர்ஸ் அணியை இந்தி நடிகர் சல்மான் கானின் தந்தையும் எழுத்தாளருமான சலீம் கான் வாங்கியுள்ளார்.