மம்தாவுக்கு தடை…குரல் கொடுத்த ஸ்டாலின்!!

 

மம்தாவுக்கு தடை…குரல் கொடுத்த ஸ்டாலின்!!

அனைத்துக் கட்சிகள் வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

மம்தாவுக்கு தடை…குரல் கொடுத்த ஸ்டாலின்!!

இந்த சூழலில் முஸ்லிம் வாக்குகளை பெற மதரீதியாக பேசி வருவதாகவும், மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டியதாகவும் மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது என்று கூறிய தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்கு 24 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது.ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஜனநாயக விரோதமானது ;அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மம்தாவுக்கு தடை…குரல் கொடுத்த ஸ்டாலின்!!

இந்நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது நியாயமான நேர்மையான தேர்தல்களில் தான் நிலை கொண்டுள்ளது எனவே ஒரு சார்பின்மை , நடுநிலை கடைபிடிக்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.