முகநூல் காதலனை தேடி வந்த பெண் முகம் எரிந்து உயிரிழப்பு

 

முகநூல் காதலனை தேடி வந்த பெண் முகம் எரிந்து உயிரிழப்பு

முகநூல் காதலனை தேடிச்சென்ற பெண் முகம் எரிந்து உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. அந்த கேரள பெண்ணுக்கு கிருஷ்ணகிரியில் நடந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முகநூல் காதலனை தேடி வந்த பெண் முகம் எரிந்து உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவாபட்டி அருகில் மேல் கொட்டாய் ஊரில் முகம் எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து காவேரிப்பட்டினம் போலீசார் இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அந்த இளம்பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரஞ்சனி(25) என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் ரஞ்சனிக்கும் காவேரிப்பட்டணம் அடுத்த வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(22) என்ற இளைஞருக்கு ஐந்து வருடங்களாக முகநூலில் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த முகநூல் பழக்கம் காதலாக மாறியிருக்கிறது.

முகநூல் காதலனை தேடி வந்த பெண் முகம் எரிந்து உயிரிழப்பு

இதை பயன்படுத்திக்கொண்டு, கார் டிரைவரான சூர்யா தனக்கு பண உதவி தேவை என்று சொல்ல, காதலன், அதுவும் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபரும் கூட என்ற நம்பிக்கையில் ரஞ்சனி, சூர்யாவை கேரளாவுக்கு வரவழைத்து நகை பணம் கொடுத்து இருக்கிறார்.

முகநூல் காதலனை தேடி வந்த பெண் முகம் எரிந்து உயிரிழப்பு

ரஞ்சனியிடம் நகைகளையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு வந்த நாள் முதல் அவருடன் தொடர்பு துண்டித்து இருக்கிறார் சூர்யா. இந்த இருந்து பார்த்துவிட்டு முகநூலிலும் தனக்கு எந்த பதிலும் சொல்லாத சூர்யாவை தேடி வேலம்பட்டி வந்திருக்கிறா ரஞ்சனி. அங்கு வந்ததும் தான் சூரியா திருமணம் செய்துகொண்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. ஆனால் கேரளாவிற்கு திரும்ப மனமில்லாமல் காவேரிபட்டினத்திலேயே தங்கியிருந்து கடந்த நான்கு மாதங்களாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முகம் எரிந்த நிலையில் ரஞ்சனியின் அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது . இது கொலையா தற்கொலையா என்பது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் விசாரணையைத் தீவிரம் காட்டி வருகின்றனர்.