பிறரால் ஏற்றப்பட்டு அணைந்த விளக்கை மீண்டும் ஏற்றலமா ?

 

பிறரால் ஏற்றப்பட்டு அணைந்த விளக்கை மீண்டும் ஏற்றலமா ?

கோயிலுக்கு செல்லும்போது கடவுளை மனமுருக வழிபட்டு, விளக்கு ஏற்றி வழிபடுவது ஐதீகம். லட்சுமி வாசம் செய்யும் விளக்கை ஏற்றும்போது சகல தீவினைகளும் அகலும். கோவிலுக்கு செல்லும்போது, அந்த இடத்தில் புதிய விளக்குகள் கிடைத்தால் வாங்கி ஏற்றலாம். சிலர் ஏற்கெனவே வழிபட்ட விளக்கை ஏற்றுவதற்கு தயக்கம் காட்டுவார்கள். ஆனால் , பிறர் ஏற்றி அணைந்த விளக்கை ஏற்றுவதும் கொடுப்பினைதான் என்கின்றனர் மூத்தோர்கள்.’

பிறரால் ஏற்றப்பட்டு அணைந்த விளக்கை மீண்டும் ஏற்றலமா ?

கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா? என்கிற குழப்பம் இனி வேண்டாம். நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது.

பிறரால் ஏற்றப்பட்டு அணைந்த விளக்கை மீண்டும் ஏற்றலமா ?

சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது என்கிறது புராணம்.

பிறரால் ஏற்றப்பட்டு அணைந்த விளக்கை மீண்டும் ஏற்றலமா ?

எனவே சந்நிதியில், அணையும் தருவாயில் உள்ள தீபத்துக்கு எண்ணை விட்டு மீண்டும் ஒளிரச் செய்யலாம். அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் ஏற்றுவதும் புண்ணியமே.