டாக்டருக்கு படித்த மகன்களை குத்திக்கொன்ற குடிகாரகும்பல் – ஸ்டெச்சர் பின்னால் கதறிக்கொண்டே ஓடிய தாய்

 

டாக்டருக்கு படித்த மகன்களை குத்திக்கொன்ற குடிகாரகும்பல் – ஸ்டெச்சர் பின்னால் கதறிக்கொண்டே ஓடிய தாய்

சிவகங்கை மாவட்டம் முத்து நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ் மகன்கள் ஜோசப் சேவியர்- கிறிஸ்டோபர். இருவரும் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வந்தனர். கொரோனா காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இருவரும் ஆன்லைன் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

டாக்டருக்கு படித்த மகன்களை குத்திக்கொன்ற குடிகாரகும்பல் – ஸ்டெச்சர் பின்னால் கதறிக்கொண்டே ஓடிய தாய்

இருதயராஜ்க்கு சொந்தமான தோட்டத்து வீடு அண்ணாமலை நகரில் இருக்கிறது. அங்கு சிலர் மது அருந்திக்கொண்டு தோட்டத்தில் வீட்டை அடித்து நொறுக்குவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தனது மகன்களை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு சென்றிருக்கிறார் இருதயராஜ். அங்கே குடிபோதையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

நீங்களெல்லாம் யார்? இங்கே எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று இருதயராஜ் தட்டிக்கேட்க , ஏடாகூடமாக பதிலளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனால் அங்கு நடந்த சம்பவத்தை கிறிஸ்டோபர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து இருக்கிறார். அப்போது திடீரென்று அந்த கும்பல் கிறிஸ்டோபர் மீது சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்.

அவரை காப்பாற்றுவதற்காக இருதயராஜ் -ஜோசப் செய்துவரும் போராடிய போது அவர்களுக்கும் கடுமையான கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டு சரமாரியாக விழுந்திருக்கிறது. இருதயராஜ்- ஜோசப் சேவியர் இருவரும் இதய ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அதன்பின்னர் கிறிஸ்டோபர் எடுத்த அந்த வீடியோ எடுத்து அந்த செல்போனை எடுத்துக்கொண்டு ஏழு பேரும் ஓடி விட்டார்கள்.

டாக்டருக்கு படித்த மகன்களை குத்திக்கொன்ற குடிகாரகும்பல் – ஸ்டெச்சர் பின்னால் கதறிக்கொண்டே ஓடிய தாய்

ஆபத்தான நிலையில் இருதயராஜ் -ஜோசப் சேவியர் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு மகன் போனாலும் இன்னொரு மகன் இருக்கிறார் என்று கொஞ்சம் ஆறுதல் கொண்ட தாய், ஜோசப் சேவியர் இறந்ததும் அவர் உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்துக் கொண்டு போன பொழுது நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியவாறு ஸ்டெச்சர் பின்னால் ஓடியது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த படுகொலை சம்பந்தமாக போலீசார் இதுவரைக்கும் 5 பேரை கைது செய்து இருக்கிறார்கள். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். தோட்டத்து வீட்டில் சாதாரணமாக 7 பேர் குடித்துவிட்டு ரகளை செய்ய வில்லை. நடந்த சம்பவத்தை வைத்து நினைத்துப் பார்த்தால் இது ஏதோ முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு நடந்த செய்யும் என்று தெரிகிறது என்று போலீசார் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

குடித்து விட்டுப் போக வந்தவர்கள் எதற்கு கத்தி, அரிவாளுடன் வரவேண்டு. ம் கிரிஸ்டோபர் ,ஜோசப், இருதயராஜ் மூவரையும் கொலை செய்யும் நோக்கத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.