சிவகாசி அருகே ஓடும்காரில் தீ பற்றியதில், ஓட்டுநர் உடல்கருகி பலி

 

சிவகாசி அருகே ஓடும்காரில் தீ பற்றியதில், ஓட்டுநர் உடல்கருகி பலி

விருதுநகர்

சிவகாசி அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததில், ஓட்டுநர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை குருநாதன் வீட்டில் இருந்து காரில் சிவகாசிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். எரிச்சந்தம் பகுதி அருகே சென்றபோது காரில் இருந்து திடீரென புகை வெளியேற தொடங்கியது. சிறிது நேரத்தில் காரில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருநாதன் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வெளியேற முயன்றார்.

சிவகாசி அருகே ஓடும்காரில் தீ பற்றியதில், ஓட்டுநர் உடல்கருகி பலி

ஆனால் கதவை திறக்க முடியாததால் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்ட அவர் மீது தீ பற்றியது. இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் கார் தீப்பற்றி எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். பின்னர், சிவகாசி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.