“வன்னியர் இடஒதுக்கீட்டை திமுக தான் செயல்படுத்தும்” மு.க.ஸ்டாலின்

 

“வன்னியர் இடஒதுக்கீட்டை திமுக தான் செயல்படுத்தும்”  மு.க.ஸ்டாலின்

வன்னியர் இடஒதுக்கீட்டை திமுக தான் செயல்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பின்னர் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு பிறகு மே 2 ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அத்துடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

“வன்னியர் இடஒதுக்கீட்டை திமுக தான் செயல்படுத்தும்”  மு.க.ஸ்டாலின்

அதிமுகவைப் பொறுத்தவரை இன்று காலை பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பாமகவுடன் தொகுதி பங்கீடு இன்று இறுதியாக வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக அதிமுக – பாமக கூட்டணி இழுபறியில் இருந்த நிலையில் நேற்று வன்னியர் இட ஒதுக்கீடு 10.5% என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்ததின் எதிரொலியாக இன்று தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

“வன்னியர் இடஒதுக்கீட்டை திமுக தான் செயல்படுத்தும்”  மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் உங்கள்தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை நாம் தான் செயல்படுத்தணும். உள் ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான்; முதல்வர் பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர் சென்னை அருகேயுள்ள நீர் நிலைகளையே தூர்வாரவில்லை. அப்படி இருக்கும் போது தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள். 4 ஆண்டுகளில் அரசு கஜானாவைத்தான் அதிமுகவினர் தூர்வாரியுள்ளனர்” என்று விமர்சித்தார்.