விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியமங்கலம் அடுத்த மலையடிப்புதூர் இந்திரா நகரை சேர்ந்த ரங்கசாமி மகன் பசுவராஜ்(23). கூலி தொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளாக மூல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்து வந்த அவர், கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதனை அடுத்து உறவினர்கள் பசுவராஜை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பசுவராஜ் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.