தீவிபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Nov 27, 2020, 21:26 IST1606492565000
ஈரோடு
ஈரோட்டில் தீ விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி லட்சுமி (58). இவர் கடந்த 20ஆம் தேதி வீட்டில் டீ வைப்பதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்தபோது, எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட லட்சுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.