‘முடியைப் பிடித்து..சாலையில் இழுத்துச் சென்று’ மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகள்!

 

‘முடியைப் பிடித்து..சாலையில் இழுத்துச் சென்று’ மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகள்!

ஹைதராபாத் அருகே மாமியாரை மருமகள் சரமாரியாக தாக்கி துன்புறுத்தும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் மல்லேபள்ளி பகுதியில் வசித்து வருபவர் தனிஷிகா சுல்தானா. இவரது மருமகள் உஜ்மா பேகம். இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்த நிலையில், உஜ்மா தனது தாயாருடன் சேர்த்து மாமியாரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதனால் மாமியார், மருமகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

‘முடியைப் பிடித்து..சாலையில் இழுத்துச் சென்று’ மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகள்!

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுல்தானாவின் மகன் சவுதி அரேபியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வரும் நிலையில் அவருடன் பேச தன்னை அனுமதிக்கவில்லை என உஜ்மா தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கீழ் வீட்டில் தானும் மேல் வீட்டில் மாமியாரும் வசித்து வருகிறோம் என்றும் அடிக்கடி கீழ் வீட்டிற்கு குடிநீர் அனுப்ப மறுப்பு தெரிவிக்கிறார் என்றும் உஜ்மா கூறியிருக்கிறார். ஒரு புறம் சுல்தானாவும் தன் மருமகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து இருவரிடமும் பேசி சமாதானம் செய்த போலீசார், அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.