“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

 

“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை… இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு என்ற திருக்குறளை முன்னிறுத்தி அதேபோல தனது பணி இருக்கும் என்று கூறியிருந்தார். முதல் நாளிலேயே கவச உடை அணிந்து கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் நலம் விசாரித்து, முறையான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

அதேபோல ரேஷன் கடைகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு முறையாக கொரோனா நிவாரணப் பொருட்களும், நிதியும் வழங்கப்படுகிறதா என அதிரடி ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் வாங்க காத்திருந்த மக்களிடம் மன்னிப்பு கோரி நெகிழ வைத்தார். அந்த வகையில் நேற்று வேங்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வுசெய்திருக்கிறார். அப்போது அங்குள்ள ஆய்வுக் குறிப்பேட்டைப் பார்வையிட்டபோது, குறிப்பு ஒன்றை எடுத்துப் பார்த்திருக்கிறார். 1959ஆம் ஆண்டு அப்போதைய குளித்தலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த முதலமைச்சர் கருணாநிதி இப்பள்ளியை ஆய்வு செய்து அவர் கைப்பட எழுதிய குறிப்பு தான் அது.

“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

இதனை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கலெக்டர் பதிவிட்டிருக்கிறார். அந்தக் குறிப்பில், “மு.கருணாநிதி எம்எல்ஏ இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்பப் பாடசாலையைப் பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107-ல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்தப் பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப் போயிருக்கின்றன.

அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாகப் பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று” என எழுதி, அன்புள்ள மு.கருணாநிதி எனக் கையெழுத்திட்டு, 26.6.1959 என்ற தேதியையும் குறிப்பிட்டுள்ளார்.