விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!

 

விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!

புதுக்கோட்டையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர், ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பிரதிபலிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலை அமைக்கப்பட்டது. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த முதல்வர், ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!

அந்த நிகழ்ச்சியின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, புதுக்கோட்டை மக்களின் எதிர்ப்பார்ப்பான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கடந்தாண்டு மட்டும் புதுக்கோட்டையில் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றும் கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு அதிகமாக நடக்கும் இடம் புதுக்கோட்டை தான் என புகழாரம் சூட்டினார்.