தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

 

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று ஏற்பட்டுள்ள திசைவேகம் மாறுபாட்டின் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அதன் படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. குறிப்பாக ஜூலை 18 முதல் 22 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.