சென்னை மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்! – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

 

சென்னை மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்! – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

கொரோனாவைத் தடுக்க சென்னை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்! – டாக்டர் ராமதாஸ் வரவேற்புசென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே கடைகளுக்கு செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருகின்றனர்.

http://


மக்களின் ஒத்துழைப்பு குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “சபாஷ்….! சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு காக்கை, குருவிகள் கூட கூடுகளை விட்டு வெளியில் வரவில்லை. மக்களும் சாலைகளுக்கு வரவில்லை. இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்!” எனக் கூறியுள்ளார்.