கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
Oct 12, 2020, 19:12 IST1602510174000
பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில் பொதுமக்களுக்கு புதுப்பானை மற்றும் அடுப்புகள் வழங்க கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், கொரோனா தொற்று காலத்தில் தமிழக அரசு நலவாரியத்தில் பதிவுஎசெய்தவர்களுக்கு அரசு வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் போதாது என்றும் அதனை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார். மேலும், தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத் திருநாள்களில் கோவில்கள் மற்றும் பொதுஇடங்களில் மக்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்த அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.