நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்… வாகன ஓட்டிகளால் உயிர்தப்பிய பயணிகள்…

 

நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்… வாகன ஓட்டிகளால் உயிர்தப்பிய பயணிகள்…

தேனி

தேனி அருகே நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சிவகுமாரி, லோகேஷ் உள்ளிட்ட 4 பேர் கார் மூலம் ஆண்டிப்பட்டிக்கு சென்றனர். காரை லோகேஷ் ஓட்டினார். இந்த நிலையில் தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது காரில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை காருக்கு பின்னால் இருசக்கர வாகன ஓட்டிகள் பார்த்து, கார் ஓட்டுநருக்கு தகவல் அளித்தனர்.

நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்… வாகன ஓட்டிகளால் உயிர்தப்பிய பயணிகள்…

இதனை தொடர்ந்து, சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு உடனடியாக 4 பேரும் வெளியேறினர். சிறிதுநேரத்தில் காரில் முழுமையாக தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து குறித்து, தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.