‘அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது’ : நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

 

‘அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது’ : நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு, அரியர் மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

‘அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது’ : நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

இந்நிலையில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை பரிசீலிக்க வேண்டும். கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரி தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம் என ஆலோசியுங்கள். தேர்வு நடத்துவது குறித்து யுஜிசி, தமிழக அரசு இரண்டும் கலந்து ஆலோசிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது’ : நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

அத்துடன் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என பல்கலை. வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.