மனிதத் தன்மை இல்லாதவர்களை அட்டகாசமாக பழிவாங்கிய எருமை மாடு – வீடியோ

 

மனிதத் தன்மை இல்லாதவர்களை அட்டகாசமாக பழிவாங்கிய எருமை மாடு – வீடியோ

மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டவர்களை எருமை மாடு ஒன்று அட்டகாசமாக பழிவாங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டவர்களை எருமை மாடு ஒன்று அட்டகாசமாக பழிவாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி வருகிறது. ஒரு மாட்டு வண்டியில் ஐந்து பேர் உட்கார்ந்து சவாரி செய்கிறார்கள். அவர்கள் மாடை அடித்து, விரட்டி ஓட்டுகிறார்கள். அந்த மாட்டு வண்டியில் உள்ளவர்கள் உற்சாகமாக கத்தி, கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேகமாக ஓடுமாறு மாடை அவர்கள் அடித்து கட்டாயப்படுத்தி ஓட வைக்கிறார்கள். அவர்களின் எடையை இழுக்க முடியாமல் மாடு துன்பப்பட்டு ஓடிக் கொண்டிருந்தது.


இவ்வாறு ஒரு விலங்கை அவர்கள் கொடுமைப்படுத்தும் வீடியோவை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், இறுதியில் அவர்களை எருமை மாடு பழிவாங்கியதை பார்த்து பார்வையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஐந்து பேரும் மாட்டு வண்டியில் அமர்ந்து கொண்டு அந்த மாடை தொடர்ச்சியாக தாக்கி வந்த நிலையில், பொறுமையிழந்த எருமை மாடு சாலையின் வலதுபுறமாகச் சென்று சாலையின் நடுவில் சென்டர்மீடியனை தாண்டி ஓடியது. இதனால் மாட்டு வண்டி குப்புற கவிழ்ந்து விழ அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் அந்த எருமை மாடு அதன்பாட்டுக்கு தப்பித்து ஓடிச் சென்றது. மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டவர்களை அந்த எருமை மாடு அட்டகாசமாக பழிவாங்கி விட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில்  மாட்டுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.