120 அடி உயர விவேகானந்தர் சிலை நிறுவ கர்நாடக பா.ஜ.க. அரசு திட்டம்… சிலை வைக்க இது நேரம் இல்ல – பொங்கும் காங்கிரஸ்

 

120 அடி உயர விவேகானந்தர் சிலை நிறுவ கர்நாடக பா.ஜ.க. அரசு திட்டம்… சிலை வைக்க இது நேரம் இல்ல – பொங்கும் காங்கிரஸ்

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் 3 ஏக்கர் இடத்தில் 120 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை நிறுவ முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுகள் போராடி வரும் இந்த சூழ்நிலையில் விவேகானந்தர் சிலை வைக்கும் கர்நாடக அரசின் திட்டம் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

120 அடி உயர விவேகானந்தர் சிலை நிறுவ கர்நாடக பா.ஜ.க. அரசு திட்டம்… சிலை வைக்க இது நேரம் இல்ல – பொங்கும் காங்கிரஸ்

விவேகானந்தர் சிலை கட்டுவது தொடர்பாக அம்மாநில வீட்டுவசதி மேம்பாட்டு துறை அமைச்சர் வி. சோமன்னா கூறுகையில், குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை போன்று பெங்களூரின் புறநகரில் உள்ள ஜிகானியில் உள்ள முத்யலா மடுவ் நீர்வீழ்ச்சிக்கு அருகில், பன்னெர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் சுவாமி விவேகானந்தர் சிலை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.

120 அடி உயர விவேகானந்தர் சிலை நிறுவ கர்நாடக பா.ஜ.க. அரசு திட்டம்… சிலை வைக்க இது நேரம் இல்ல – பொங்கும் காங்கிரஸ்

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு முன்னுரிமை இல்லை. சிலை கட்டுவதற்கான நேரம் இல்லை. மாநிலத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேரம். மாநிலத்தை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை நாம் பார்க்க வேண்டும். இன்று வரை முதல்வர் ஒரு விவசாயிகள் கூட்டத்தை கூட ஏற்பாடு செய்யவில்லை. ஒரு பைசா கூட விவசாயிகள் அல்லது தொழிலாளர்களுக்கு போய் சேரவில்லை. அரசாங்கத்திடம் போதுமான நிதி இருக்கும்போது சிலையை கட்டுங்கள். இது போன்ற செயல்களுக்கான நேரம் இதுவல்லை. மாநிலத்தையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.