அக்காவின் கள்ளக்காதலனை கொல்ல 12 வருடங்கள் காத்திருந்த தம்பி

 

அக்காவின்  கள்ளக்காதலனை  கொல்ல 12 வருடங்கள் காத்திருந்த தம்பி

காஞ்சிபுரம் அருகே சின்ன அய்யங்குளத்தை சேர்ந்தவர் ஷீலா. இவருக்கும் கனகராஜ் என்பவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கணவர் இவரை பிரிந்து சென்றுவிட்டார். உறவினர்கள் எத்தனையோ சமாதானம் சொல்லியும் ஷீலாவுடன் கணவர் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

அக்காவின்  கள்ளக்காதலனை  கொல்ல 12 வருடங்கள் காத்திருந்த தம்பி

இதனால் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் ஷீலா. இது தனக்கு மேலும் வசதியாக போய்விட்டதால் எந்தவித பயமும் இல்லாமல் சுதந்திரமாக வந்து ஷீலாவுடன் உல்லாசமாக இருந்து சென்று வந்துள்ளார் கனகராஜ். இது ஷீலாவின் தம்பி ராஜ்க்கு உறுத்தலாக இருந்துள்ளது. அப்போது 9 வயது தான் என்பதால் அவரால் கனகராஜை எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் கனகராஜ் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

தனது அக்காவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கு எல்லாம் காரணம் கனகராஜ்தானே. அதனால் அவரை கொன்றுவிட வேண்டும் என்று துடித்திருக்கிறார். ஆனால், சிறுவனான தன்னால் அது முடியாது போகவே ஆத்திரத்தில் தவித்து வந்திருக்கிறார்.

அக்காவின்  கள்ளக்காதலனை  கொல்ல 12 வருடங்கள் காத்திருந்த தம்பி

இப்படியே 12 வருடங்கள் ஓடிவிட்டன. தற்போது ராஜ்க்கு 21 வயதாகிறது. எத்தனை வருடங்கள் ஆனாலும் கனகராஜ் மீதுள்ள ஆத்திரம் மட்டும் ராஜ்க்கு போகவே இல்லை. இப்போதுதான் அவருக்கு ஆத்திரம் அதிகமாகி இருந்திருக்கிறது.

இந்த நிலையில் கனகராஜ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் வாய்ப்பு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நேற்று இரவு கனகராஜ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார் ராஜ். அப்போது என் அக்காவின் வாழ்க்கையை சீரழித்துவிட்டாயே என்று மது பாட்டிலை உடைத்து ஆவேசமாக கனகராஜ் வயிற்றில் குத்தி இருக்கிறார் ராஜ். இதில் ரத்தம் பீறிட்டு கீழே விழுந்து மயங்கி இருக்கிறார் கனகராஜ்.

அப்போது நண்பர்களின் உதவியுடன் அம்மிக்கல்லை தூக்கி வந்து கனகராஜன் முகத்தில் போட்டிருக்கிறார். இதில் முகம் சிதைந்து துடி துடித்து உயிரிழந்திருக்கிறார் கனகராஜ். இதையடுத்து ராஜ் மற்றும் நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர்.

கனகராஜ் கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றது.