பெயிண்டரை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி… மனைவிக்கு பிறந்தநாள் கொண்டாடியதால் வெறிச்செயல்…

 

பெயிண்டரை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி… மனைவிக்கு பிறந்தநாள் கொண்டாடியதால் வெறிச்செயல்…

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே மனைவி பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய அண்ணனை, கத்தியால் குத்திகொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள குமாரச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் யோவான்(25). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது தம்பி ஏசான்(22). இவருக்கு திருமணமாகி அனுஷா என்ற மனைவி உள்ளார். மனைவி ஆந்திராவில் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், ஏசான் குமாரச்சேரியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே ஏசான் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த ஏசான், திடீரென கத்தியால் யோவானை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, வயிற்று பகுதிகளில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெயிண்டரை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி… மனைவிக்கு பிறந்தநாள் கொண்டாடியதால் வெறிச்செயல்…

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கொலையாளி ஏசானை கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் துணிக்கடையில் வேலை பார்த்த போது ஏசானுக்கு, அனுஷாவுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர், இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏசான் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் அனுஷாவின் பிறந்த நாளின்போது, யோவான் ஆந்திராவுக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த ஏசான் கத்தியால் குத்தி படுகொலை செய்தது தெரியவந்தது.