`மறுவீட்டுக்கு சென்ற தம்பதி; தூக்கில் தொங்கிய புதுப் பெண்!’- 5வது நாளில் நடந்த விபரீதம்

 

`மறுவீட்டுக்கு சென்ற தம்பதி; தூக்கில் தொங்கிய புதுப் பெண்!’- 5வது நாளில் நடந்த விபரீதம்

திருமணமான 5வது நாளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

`மறுவீட்டுக்கு சென்ற தம்பதி; தூக்கில் தொங்கிய புதுப் பெண்!’- 5வது நாளில் நடந்த விபரீதம்

திருப்பூர் கோவில் வழி அருகே உள்ள அமராவதி நகரைச் சேர்ந் ராஜு- வள்ளியம்மாள் தம்பதிக்கு அழகேஸ்வரி, தேவி என 2 மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு அழகேஸ்வரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்த நிலையில், இளைய மகள் தேவியை (20), உடுமலையைச் சேர்ந்த தாய் மாமா மகனான டெய்லர் செல்வராஜிக்கு (29) திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், கடந்த 8ம் தேதி கணியூரில் உள்ள தேவகிரி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. மறு வீட்டிற்காக 11ம் தேதி தாராபுரம் மாருதி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புதுமணத் தம்பதி சென்றனர்.

`மறுவீட்டுக்கு சென்ற தம்பதி; தூக்கில் தொங்கிய புதுப் பெண்!’- 5வது நாளில் நடந்த விபரீதம்

அடுத்தநாள் காலை புதுமணத் தம்பதி உணவருந்தினர். பின்னர் செல்வராஜ் வெளியில் சென்றுவிட்டார். தேவி மட்டும் அறையில் இருந்துள்ளார். மதியம் கறி விருந்திற்காக தேவி இருந்த அறை கதவை உறவினர்கள் தட்டியுள்ளனர். அதிக நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீட்டின மேல் விட்டத்தை உடைத்து பார்த்தபோது தேவி தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்கள், தேவியை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

`மறுவீட்டுக்கு சென்ற தம்பதி; தூக்கில் தொங்கிய புதுப் பெண்!’- 5வது நாளில் நடந்த விபரீதம்

தகவலறிந்து மருத்துவமனை சென்ற தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விரும்பிதான் தாய் மாமா மகனை தேவி திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் மணவிருப்பத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் 5 வது நாளில் தூக்கில் தொங்கியது ஏன் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.