வீட்டின் முன் விளையாடிய சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

 

வீட்டின் முன் விளையாடிய சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே வீட்டிற்கு முன் தாழ்வாக சென்ற மின்வடத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டின் முன் விளையாடிய சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

திருநின்றவூர் அடுத்த கன்னிகாபுரம் அங்காளம்மன் கோவில்தெருவை சேர்ந்த ராமு(40) என்பவரது மகன் சூர்யா(10).
ராமுவின் வீட்டிற்கு அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ள மின்வடம் மிகவும் தாழ்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மின்வடத்தை உயர்த்தி பிடிக்க இரும்பு கம்பியை வீட்டிற்கு முன் ஊன்றி வைத்துள்ளனர்.

வீட்டின் முன் விளையாடிய சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


இந்நிலையில் சூர்யா நேற்று மதியம் வீட்டிற்கு முன் விளையாடியபோது, எதிர்பாராத விதமாக அந்த இரும்பு கம்பியை பிடித்துள்ளார்.
அப்போது அவர் மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டார்.
உடனடியாக சிறுவனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டின் முன் விளையாடிய சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு