மொட்டை மாடி அருகே சென்ற மின் கம்பியை பிடித்த சிறுவன் உயிரிழப்பு

 

மொட்டை மாடி அருகே சென்ற மின் கம்பியை பிடித்த சிறுவன் உயிரிழப்பு

கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாஜகான் – மும்தாஜ் தம்பதியினர் தங்கை முபீனா திருப்பூரில் வசித்து வருகிறார். இவர் பக்ரீத் பண்டிகைக்காக சகோதர் வீட்டிற்கு கேரளா சென்றுள்ளார்.

மொட்டை மாடி அருகே சென்ற மின் கம்பியை பிடித்த சிறுவன் உயிரிழப்பு

திரும்பி வரும்போது தனது சகோதரின் மகன் அல்சாபித் மற்றும் இரண்டு மகள்களை அழைத்துக்கொண்டு திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

நேற்று மும்பீனாவின் வீட்டு மாடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டு மாடி அருகே மிக தாழ்வாக இருந்த மின் கம்பியை சிறுவன் அல்சாபித் எதேச்சையாக தொட்டிருக்கின்றான். இதில் சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து பேச்சு மூச்சின்றி போய்விட்டான்.

மொட்டை மாடி அருகே சென்ற மின் கம்பியை பிடித்த சிறுவன் உயிரிழப்பு

கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான்.

தகவலறிந்து திருப்பூர் தெற்கு போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனின் மரணம் தொடர்பாக மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பக்ரீத் விருந்துக்காக வந்த சிறுவன் இப்படி மின்சாரம் பாய்ந்து உயிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.