படுக்கையில் வேறொருவருடன் இருந்த தாய்…கொலை செய்த 15 வயது சிறுவன்!!

 

படுக்கையில் வேறொருவருடன் இருந்த தாய்…கொலை செய்த 15 வயது சிறுவன்!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மணலூர் லால்புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 வயதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பாலமுருகன் கவரிங் செயின் செய்யும் தொழில் செய்துவரும் நிலையில் ,சங்கீதா மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.கொரனோ காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இதனால் சிறுவன் வீட்டில் இருந்துள்ளார்.

படுக்கையில் வேறொருவருடன் இருந்த தாய்…கொலை செய்த 15 வயது சிறுவன்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 வயது சிறுவன் நண்பர்களுடன் வெளியே சென்ற நிலையில் வீட்டுக்கு திரும்பியபோது சங்கீதா வீட்டில் வேறு ஒரு நபருடன் தகாத உறவில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து மகனுக்கும் தாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே சங்கீதா வீட்டை விட்டு வெளியேறி , மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் சங்கீதா வீடு திரும்பியதாக தெரிகிறது.

படுக்கையில் வேறொருவருடன் இருந்த தாய்…கொலை செய்த 15 வயது சிறுவன்!!

இதையடுத்து தாய் மீண்டும் வீட்டுக்கு வந்ததை அறிந்த அவரது மகன், சங்கீதாவை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது சங்கீதா சிறுவனிடமிருந்து தப்பிக்க முயன்றபோது ஓட ஓட விரட்டிய 15 வயது சிறுவன் கத்தியால் தனது தாயின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் குடல் சரிந்து சங்கீதா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்துக்கு சென்ற சிறுவன் தனது தாயை கொன்று விட்டதாக சரணடைந்தார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். தகாத உறவில் ஈடுபட்ட தாயை பெற்ற மகனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.