கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆவதால் விசாரணை

 

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆவதால் விசாரணை

செல்போனில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் மரணம் அடைந்துவிட்டதாக ஊரார் கூறினாலும், திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது என்பதால் அது கொலையாக இருக்கக்கூடுமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆவதால் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. அவரது மனைவி லக்சனா. வீட்டின் அருகே உள்ள அவர்களது விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடி சென்றிருக்கிறார் லக்சனா.

அப்பொழுது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்களும், உறவினர்களும் கிணற்றில் விழுந்த லக்சனாவை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆவதால் விசாரணை

உடனடியாக விரைந்து வந்த உமராபாத் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் லக்சனா உயிரிழந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உறவினர்கள் இடையே விசாரணை நடைபெற்று வருகிறது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: திருமணமாகி மூன்றரை ஆண்டுகள்தான் ஆவதால் விசாரணை