பிரிட்டன் விமான சேவைகளுக்கான தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

 

பிரிட்டன் விமான சேவைகளுக்கான தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

பிரிட்டனில் தற்போது புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. B117 எனப்படும் இந்த புதிய வகை கொரோனா 70% வேகமாக பரவுக்கூடிய தன்மை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பிரிட்டனில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை நாடுகள் பிரிட்டன் உடனான போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக முடக்கின.

பிரிட்டன் விமான சேவைகளுக்கான தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

அந்த வகையில், இந்தியாவிலும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு டிச.31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த 23ம் தேதி போடப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 6 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. இன்று பாதிப்பின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், பிரிட்டனுடனான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை ஜன.7ம் தேதி வரை நீடித்து விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.