பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது

 

பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சைக்கிள், பைக் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதி.

செல்போன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேளாண் உபகரணங்கள், பம்பு செட்டு பழுது நீக்கும் நிறுவனங்கள், மண்பாண்டகள் கைவினை பொருள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.