பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க வேண்டும் : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!

 

பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க வேண்டும் : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர்.

பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க வேண்டும் : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!

அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி பொதுத் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் பொதுத்தேர்வு தொடங்குவதை ஒட்டி மாணவர்களுக்கான விடுதியை திறக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மாணவர் விடுதிகளை திறக்கவும் வலியுறுத்தியுள்ளது.