பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு!

 

பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு!

திருச்சி

திருச்சியில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விமான நிலையம் காவேரி நகர் பகுதியில் இன்று காலை சாக்குமூட்டையில் கட்டிய நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாக்குமூட்டையை பிரித்து பார்த்தபோது, அதனுள் குறை பிரசவத்தில் பிறந்த பெண் சிசு இருந்தது. இதனை அடுத்து போலீசார், உடனடியாக குழந்தையை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு!

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வீசி சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.