“பதவி சுகத்துக்காக திமுக செய்த அட்டூழியங்கள் ஏராளமானவை”- ஓபிஎஸ் காட்டம்!

 

“பதவி சுகத்துக்காக திமுக செய்த அட்டூழியங்கள் ஏராளமானவை”- ஓபிஎஸ் காட்டம்!

அதிமுகவின் ஒரே எதிரி திமுக தான் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கான அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் மாவட்டந்தோறும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

“பதவி சுகத்துக்காக திமுக செய்த அட்டூழியங்கள் ஏராளமானவை”- ஓபிஎஸ் காட்டம்!

சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“பதவி சுகத்துக்காக திமுக செய்த அட்டூழியங்கள் ஏராளமானவை”- ஓபிஎஸ் காட்டம்!

அப்போது விழாவில் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்தது திமுக தான். அப்போது அவர்கள் அமைதி காத்தனர். பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளைப் பறிகொடுத்த கட்சி திமுக. திமுக செய்த அட்டூழியங்கள் ஏராளமானவை. ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்வராக வரவே முடியாது. ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் அனைத்தும் இந்த ஆட்சியிலும் எந்த குறையும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் எந்த வெறுப்பையும் சம்பாதிக்காத கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவின் ஒரே எதிரி திமுக தான்; திமுகவை அப்புறப்படுத்துவதற்காக அதிமுக உருவாக்கப்பட்டது என்றார்.