அபினை காரில் கடத்திய பெரம்பலூர் பாஜக துணை தலைவர் கைது!
Aug 12, 2020, 08:41 IST1597201882000
திருச்சியிலிருந்து 4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்திய நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியிலிருந்து 4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்திய பெரம்பலூர் மாவட்ட பாஜக துணை தலைவர் அடைக்கலராஜ் உள்ளிட்ட 5 பேர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் போலீசாரால் கைதாகியுள்ளார்.
சித்த மருத்துவர் மோகன் பாபு, பாலசுப்பிரமணியம், சரவணன் உள்ளிட்ட ஐவரை திருச்சி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் வளைத்து பிடித்ததுடன் அபினையும் பறிமுதல் செய்தனர்.