அத்துமீறிய தந்தை… தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மகள்!

 

அத்துமீறிய தந்தை… தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மகள்!

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள நெடுங்காலம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் முருகன்(40). நாடக கலைஞர். இவரது மனைவி மஞ்சு (32). இவர்களுக்கு ஷர்மிளா (19) மற்றும் அபிநயா (17) என்ற 2 மகள்கள் உள்ளனர். தையல் தொழில் செய்து வரும் மஞ்சு, நேற்று நூல் வாங்குவதற்காக இளைய மகளுடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.

அத்துமீறிய தந்தை… தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மகள்!

இதனால் மூத்த மகள் ஷர்மிளா மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த முருகன், மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் முருகனை தாக்கி உள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகனின் தலையில், அவர் அம்மிக்கல்லை போட்டுள்ளார். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மாவட்ட ஏ.டி.எஸ்.பி கிரண்ஸ்ருதி மற்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.