10ம் வகுப்புத் தேர்வை 2 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்! – ஆசிரியர்கள் சங்கம் வழக்கு

 

10ம் வகுப்புத் தேர்வை 2 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்! – ஆசிரியர்கள் சங்கம் வழக்கு

10ம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் முதல் வாரம் 10ம் வகுப்புத் தேர்வு தொடங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே பின்னர் மாற்றப்பட்டது. அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு சீராகுமா என்ற கேள்விக்குறி உள்ளது.

10ம் வகுப்புத் தேர்வை 2 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்! – ஆசிரியர்கள் சங்கம் வழக்குநகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தேர்வு எழுத அனுப்பும் மனநிலையில் இல்லை. தேர்வை அடுத்த ஆண்டுகூட எழுதிக்கொள்ளலாம், உயிர் போனால் வருமா என்று பல பெற்றோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது ஒற்றைக் குழந்தை என்ற நிலையில் அவர்கள் கேள்வியும் நியாயமாகவே உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 10ம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மாணவர்களுக்கு குறைந்தது 15 நாட்களாவது பயிற்சி அளித்துவிட்டு தேர்வை எதிர்கொள்ள அனுமதிக்க வேண்டும். தற்போதைய சூழலில் அதற்கு சாத்தியம் இல்லை. எனவே, 10ம் வகுப்புத் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.