“முன்னாடியே உதவி செய்திருந்தா அவர காப்பாத்தியிருக்கலாம்” : நடிகர் ரோபோ சங்கர் உருக்கம்!

 

“முன்னாடியே உதவி செய்திருந்தா அவர காப்பாத்தியிருக்கலாம்”  : நடிகர் ரோபோ சங்கர் உருக்கம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மறைவுக்கு நடிகர் ரோபோ சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“முன்னாடியே உதவி செய்திருந்தா அவர காப்பாத்தியிருக்கலாம்”  : நடிகர் ரோபோ சங்கர் உருக்கம்!

இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தவசி அண்ணனை கடைசியாகப் பார்த்த ஆள் நான்தான். அதன் பிறகு யார் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறப்பு செய்தியை கேட்டு மிகவும் துயரமுற்றேன். இப்பதானே பார்த்துவிட்டு வந்தோம்; தான் திரும்ப வருவேன் என்று உறுதியாகக் கூறிய அவர் இறந்து விட்ட செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரையுலக கலைஞர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன், நல்ல கலைஞர்களை, நம் திரையுலகை சேர்ந்த யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக தயவு செய்து உதவி செய்யுங்கள். அண்ணனுக்கு முன்னதாகவே நாம் உதவி செய்திருந்தால் அவர் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று உருக்கமாக கூறியுள்ளார் .

“முன்னாடியே உதவி செய்திருந்தா அவர காப்பாத்தியிருக்கலாம்”  : நடிகர் ரோபோ சங்கர் உருக்கம்!

நான் கடவுள், ஜில்லா, வீரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவருக்கு திமுக எம்எல்ஏ சரவணன் மதுரையில் உள்ள தனது மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்து வந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ரோபோ சங்கர், நடிகர் சூரி உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி அளித்தனர்.

இருப்பினும் நேற்று இரவு 8:15 அளவில் நடிகர் தவசி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.