“அந்த பெண் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள்” : மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு !

 

“அந்த பெண் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள்” : மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு !

அமைச்சர் வேலுமணி இன்றோடு கொட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில், ‘எல்.இ.டி. விளக்குகளை கொள்முதல் செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் ; வேலுமணி உள்ளாட்சி அமைச்சரா? ஊழலாட்சி அமைச்சரா? தங்கமணி, வேலுமணி எல்லா மணியும்; எல்லாமே money moneyன்னு இருக்கு..இப்படி பல அமைச்சர்கள் குறித்து ஊழல் புகாரை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் என்று பேசினார்.

“அந்த பெண் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள்” : மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு !

அப்போது கேள்வி கேட்க அனுமதி இல்லாத பெண் ஒருவர் மைக்கை வாங்கி ஸ்டாலினிடம் திடீரென கேள்வி கேட்டுள்ளார். அந்த பெண்ணிடம் ஸ்டாலின் , நீங்கள் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள் ; தேவையில்லாத கேள்விகளை கேட்கின்றீர்கள், வெளியேறுங்கள் என்று கூறியதுடன் என் கிட்ட கொடுத்த பட்டியல்ல உங்க பெயர் இல்லை? நீங்கள் எந்த ஊர் என்று கேட்க? ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவது எதிர்கேள்வி கேட்க? அங்கு சலசலப்பு ஏற்பட்டது . இதையடுத்து ஸ்டாலினிடம் தொடர்ச்சியாக கேள்வி கேட்ட பெண்ணை கூட்டத்திலிருந்து திமுகவினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

“அந்த பெண் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள்” : மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு !

அப்போது பேசிய ஸ்டாலின், “மக்கள் சபை கூட்டத்தை நடத்த விடாமல் அமைச்சர் வேலுமணி பெண் மூலம் கலவரத்தை தூண்டி விடுகிறார். மக்கள் சபை கூட்டத்தில் திமுகவினர் போல அமர்ந்து பிரச்சனையை உருவாக்க பார்க்கின்றனர். பிரச்சனையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; அமைச்சர் வேலுமணி இன்றோடு கொட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் .