“அதை” காமித்த அதிகாரி -உதை கொடுத்த பொது மக்கள் – உதவி தொகை கேட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

“அதை” காமித்த அதிகாரி -உதை கொடுத்த பொது மக்கள் – உதவி தொகை கேட்ட  பெண்ணுக்கு நடந்த கொடுமை

உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை  பொதுமக்கள்  அடித்து, உதைத்தனர்

“அதை” காமித்த அதிகாரி -உதை கொடுத்த பொது மக்கள் – உதவி தொகை கேட்ட  பெண்ணுக்கு நடந்த கொடுமை

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டி.எஸ்.ஜெயதார். அவரிடம், அதே தாலுகா அங்கலி கிராமத்தை சேர்ந்த விதவை பெண் ஒருவரின் மகன்  விதவை உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அவர், அவரின் தாயாரை தன்னை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார்

இதையடுத்து அந்த விதவை பெண் தனது மகனை அழைத்து கொண்டு அந்த தாசில்தாரை பார்க்கவந்தார் அப்போது அந்த அலுவலகத்திற்கு வெளியே மகனை நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார்.

அப்போது அந்த தாசில்தார் அந்த விதவை பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசினார். அத்துடன் நிற்காமல் அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் ஒருபடி மேலே போய், தனது பேண்டை கழற்றி மர்ம உறுப்பை காட்டினாராம்  இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விதவை பெண் செய்வதறியமால் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அவர் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கூறினார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் மகன் தாசில்தாரின் பாலியல் தொல்லை பற்றி ஊடகத்திடம் கூறினார் .உடனே பொது மக்களும் அந்த ஆபீஸ்  வாசலில் கூடினர் .பின்னர் அநத பெண் உள்பட பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அந்த தாசில்தாரை அடித்து உதைத்தனர் .பிறகு அங்கு வந்த போலீசார் அந்த தாசில்தாரை மீட்டு அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்