எந்தெந்த தொகுதியை அதிமுகவிடம் பறிக்கொடுத்தது திமுக!! தந்தி டிவி கருத்துக்கணிப்பு

 

எந்தெந்த தொகுதியை அதிமுகவிடம் பறிக்கொடுத்தது திமுக!! தந்தி டிவி கருத்துக்கணிப்பு

சட்டமன்ற தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடந்துமுடிந்தது. அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாக உட்பட மொத்தம் 10 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அதேபோல் திமுக- காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக, விசிக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் இருந்தன. இவை தவிர டிடிவி தினகரனின் அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உடனும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக மற்றும் ஐஜேகேவுடனும் தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி மட்டுமே சட்டமன்ற தேர்தலை கூட்டணி இன்றி எதிர்கொண்டது.

Image

இந்நிலையில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், சோழிங்கநல்லூர், ராயபுரம், வேளச்சேரி ஆகிய தொகுதிகள் மட்டுமே அதிமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. திருப்போரூர், மயிலாப்பூர், மதுராந்தகம் மற்றும் ஆவடி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர், செய்யூர், மாதவரம்,திருவொற்றியூர், ஆர்.கே நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்,ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய தொகுதிகள் திமுக வசம் உள்ளது.