’கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களுக்கும் புது வியூகம்’ ஜி.கே.வாசன்

 

’கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களுக்கும் புது வியூகம்’ ஜி.கே.வாசன்

கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆயினும் இறப்பு விகிதம் குறைவதும் நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆறுதல் அளிக்கின்றன. இதற்கு சிறப்பான நடவடிக்கைகளே காரணம் என அரசைப் பாராட்டியுள்ளார் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

அவர் ’சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வந்தபொழுது தமிழக அரசும் சுகாதாரத்துறை, மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தொடர் முயற்சியாலும் புதுப்புது வியூகங்களாலும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. அதிக அளவு பரிசோதனைகளாலும் உடனடி மருத்துவத்தாலும் தீவிரக் கண்காணிப்பாலும் பல்லாயிரக்கணக்கானோர் விரைவாகக் குணமடைந்துள்ளனர்.

’கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களுக்கும் புது வியூகம்’ ஜி.கே.வாசன்

ஆனால், தற்பொழுது சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. ஆகவே, சென்னையைப் போன்று புது வியூகங்களை தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் விரைந்து செயல்படுத்தி தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

மேற்கொண்டு அரசு தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும் கட்டுப்பாடுகளையும் கோட்பாடுகளையும் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளையும் தவறாது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

’கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களுக்கும் புது வியூகம்’ ஜி.கே.வாசன்கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் இதுவரை அளித்துள்ள ஆதரவையும் ஒத்துழைப்பையும் அனைவரும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.