பிரதோஷம் – பெரிய கோயில் நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம்
Oct 29, 2020, 11:19 IST1603950594000
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நேற்று மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் தீபா ஆராதனை நடைபெற்றது. இதனையொட்டி, மகா நந்திகேசுவரருக்கு கோயில் அர்ச்சகர்கள் பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு அபிஷேம் செய்தனர்.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த நந்திகேசுவரருக்கு அபிஷேகமும், தீபாரதனையும் காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது.
இதனையொட்டி முக கவசம் அணிந்து, கோயிலுக்கு வந்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.