புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு – நெற்கதிர், வாழைத்தார்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு – நெற்கதிர், வாழைத்தார்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

திருவையாறில் புறவழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கையில் நெற்கதிர் மற்றும் வாழைத்தார்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காணொலி மூலம் நடைபெற்றது.

புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு – நெற்கதிர், வாழைத்தார்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இதனையொட்டி, திருவையாறு ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது, திருவையாறு புறவழிச்சாலை அமைக்க விளை நிலங்களை

புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு – நெற்கதிர், வாழைத்தார்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வயலில் விளைந்த வாழைத்தார்கள் மற்றும் நெல் கதிர்கள் கையிலேந்தியவாறு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு – நெற்கதிர், வாழைத்தார்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புறவழிச் சாலைக்கு விளைநிலங்களை எடுக்கக்கூடாது என்றும், திருவையாறு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.