கொரோனாவுக்கு மருந்து: போலி சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமீன்!

 

கொரோனாவுக்கு மருந்து: போலி சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமீன்!

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனாவுக்கு மருந்து ஏதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்திக் கொண்டு கொரோனா தடுப்பு மருந்து தன்னிடம் உள்ளதாகவும், கொரோனாவை தன் உடம்பில் செலுத்தினால் தன்னுடைய மருந்தினால் மீண்டு வந்து நிரூபிக்கிறேன் என சித்த மருத்துவர் தணிகாசலம் கூறியிருந்தார்.

கொரோனாவுக்கு மருந்து: போலி சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமீன்!

இதையடுத்து தணிகாசலம் மீது சுகாதாரத்துறை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வதந்தி பரப்பியதாக தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பொய்யான தகவல் பரப்பியதால், தணிகாசலம் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவரின் ஜாமீன் மனுவும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு மீண்டும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னையை விட்டு செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளனர்.