குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தணிகாச்சலம் மனு!

 

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தணிகாச்சலம் மனு!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்த மருத்துவர் தணிகாசலம் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக சித்த மருத்துவர் தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இந்த நிலையில், மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தணிகாச்சலம் மனு!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தணிகாசலம் மனு அளித்துள்ளார். தணிகாசலம் சார்பில் அவரது தந்தை கலியபெருமாள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு மருந்துகளையே தெரிவித்ததாகவும், தன்னுடைய சிகிச்சையால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் மனுவில் தகவல் அளித்துள்ளார். தான் கூறிய கருத்துக்களை காவல்துறை தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரம்பரிய மருத்துவம் செய்து வரும் தனக்கு, கடலூர் வருவாய்த்துறை தனக்கு முறையான சான்றிதழ் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னை குண்டர் சட்டத்தில் அடைக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகளை விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.