“என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை, என் உயிர் இருக்கும் வரையில் பாஜகவில் தான் இருப்பேன்”

 

“என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை, என் உயிர் இருக்கும் வரையில் பாஜகவில் தான் இருப்பேன்”

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில வணிக பிரிவின் துணை தலைவரும் திருவண்ணாமலை தொகுதியின் பாஜக சட்டமன்ற வேட்பாளருமான தணிகைவேல் நீக்கம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

“என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை, என் உயிர் இருக்கும் வரையில் பாஜகவில் தான் இருப்பேன்”

அப்போது பேசிய தணிகைவேல், “தன்னை பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதை தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொண்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் வரவில்லை. நீக்கம் தொடர்பாக வருகின்ற பத்தாம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து நீக்கப்பட்ட காரணம் குறித்து பேச உள்ளேன். என் உயிர் இருக்கும் வரையில் பாஜகவின் தான் இருப்பேன். வேறு கட்சியிலும் சேர மாட்டேன். பாஜகவின் மாநில வர்த்தக அணியில் பணியாற்றி இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது.

திருவண்ணாமலை,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் , திருப்பத்தூர், வாணியம்பாடி நான்கு சட்டமன்றத் தொகுதியில் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்சி பணியை மேற்கொண்டுள்ளேன். அதை தன்னால் பட்டியலிட்டு காட்ட முடியும்” என தெரிவித்தார்.