“இன்றும் ஓபிஎஸ் சசிகலாவின் விஸ்வாசி தான்” உண்மையை உடைத்த தங்க தமிழ்ச்செல்வன்

 

“இன்றும் ஓபிஎஸ் சசிகலாவின் விஸ்வாசி தான்” உண்மையை உடைத்த தங்க தமிழ்ச்செல்வன்

கடந்த 2002 ஆம் ஆண்டு போடி இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை ராஜினாமா செய்ய சொன்னபோது, அவர் தயங்கியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தங்க தமிழ்ச்செல்வன், தான் ராஜினாமா செய்யபோவது ஓபிஎஸ்க்கு தெரியாது என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜெயலலிதா, ஓபிஎஸ்-ஐ நம்பவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

“இன்றும் ஓபிஎஸ் சசிகலாவின் விஸ்வாசி தான்” உண்மையை உடைத்த தங்க தமிழ்ச்செல்வன்

இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில், “நான் ராஜினாமா செய்வது குறித்து ஓபிஎஸ்க்கு எதுவும் தெரியாது. அது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். ஜெயலலிதா என்னை ராஜினாமா பண்ண சொல்லும் போது ஓபிஎஸ் சீன்லையே கிடையாது. என் மனைவிக்கே தெரியாது. ஆரம்பத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆதரவாளர் தான். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கூட எந்தவொரு பிரச்சாரத்திலும் ஓபிஎஸ் சசிகலா குறித்து விமர்சிக்கவில்லை. டிடிவி தினகரனுடன் கூட்டு சேர்ந்துதான் என்னை தோற்கடித்தனர். இன்றைக்கும் ஓபிஎஸ் சசிகலாவின் விஸ்வாசிதான், சசிகலா சுற்றுப்பயணம் செய்தால் ஓபிஎஸ் குடும்பமே சென்று அவரது காலில் விழுந்து கட்சியில் இணைவார்கள்” எனக் கூறினார்.
…..