எலுமிச்சை பழத்தால் பறிபோன இளம் பெண் உயிர்

 
ச்

திருவள்ளுர் அருகே இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயன்ற இளம் பெண்  மின்சாரம்  தாக்கி  பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

death

திருவள்ளுர் அடுத்த வரதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பக்தவச்சலம் மனைவி லோகேஸ்வரி (42), இவர் தனது வீட்டின் மாடியிலிருந்து  இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயன்றுள்ளார். அப்போது இரும்பு கம்பி  தாழ்வாக  செல்லும் மின்சார கம்பியில் உராசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேஸ்வரி பலியானார். மின்சாரம் தாக்கி பலியானதை கண்ட குடும்பத்தினர் மின்சாரம் துண்டிப்பு செய்து அவர் உடலை மீட்டனர்.

இச்சம்பவம்  திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தெரியவந்தால் போலீசார், அவர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பக்தவச்சலனுக்கும் லோகேஸ்வரிக்கும் திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர். குடியிருப்பு மேல் செல்லும்  உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்றி அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ஏற்கனவே மின்சார வாரியத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மின்சாரத்துறை அலட்சியப்போக்கால் இளம் பெண் பலியானதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி  திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்  அமர்ந்து  சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாழ்வாக குடியிருப்பு பகுதியில் செல்லும் மின்கம்பியை  மாற்றி அமைக்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் போலீசார் கூறியதால் பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 20  நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.